சனி, 28 மார்ச், 2009

அன்புள்ள வித்யா அக்காவுக்கு,

உங்களின் பதிவைப் பார்த்த பின்புதான் நான் எனது பதிவைத் தொடங்கி எழுத ஆரம்பித்தேன். கதை கேளு கதை கேளு - பாகம் 12 இரண்டு நாட்களுக்கு முன்புதான் படித்தேன். பேச்சு வாக்கிலேயே எழுதுவதென்பது ஒரு கலை! அது உங்களுக்கு கைவந்திருக்கிறது! எழுத்து நடை மிகவும் அருமை அக்கா!

//புருஷன் இல்லாமல், விதவை பெண்களால் காலம் தள்ளி விட முடிகிறது. ஆண்களால் பெண்டாட்டி இல்லாமல் அவர்களின் வாழ்வில் ஏன் ஒரு வெறுமை சூழ்ந்து விடுகிறது??? Male Chauvinists யாராவது பதில் சொல்லுங்கள்.//

ஏன் அக்கா அப்படி எழுதினீர்கள்? ஆணாதிக்கம் கொண்டவர்கள்தான் பதில் சொல்ல வேண்டுமென்பதில்லை. எனக்குத் தெரிந்த, என் மனதில் பட்ட கருத்தைக் கூறுகிறேன்.